
கல்தோன்றி மண்தோண்றா
காலத்து தமிழினம்
செந்நீரை கண்ணீராய்
வடிக்கிறது தினம் தினம்!
நம்நாடு நம் வீடு
என்றிருந்த ஒரு நேரம்
நமக்கொரு நாதியில்லை
என்று போன ஒரு காலம்!
ஓடி ஒளிவதற்கு
கோழையல்ல நம்மினம்
கூடி அழிவதற்கு
தேவையில்லை எம்மிடம்!
ஈழத்தாய் ஈன்றெடுத்த
வீரத்தலை மகன் நீ!
வீரத்தாய் பெற்றெடுத்த
தளராத நிறைகுடம் நீ!
தமிழ் அன்னை நமக்களித்த
இணை இல்லா பொக்கிசம் நீ!
இல்லாமல் போனாய் என்று
சிலர் அன்று கூறுகையில்
கணம் என் மனம் கூட
கள்ளி மரம் ஏறியது!
கணக்குப் போடுவது
கைவந்த கலை உனக்கு
காணாமல் போனாய் என்றால்
கணக்குப் பிழை எம்மதுவே!
நமது இன அழிப்புதனை
சிங்களம் நிறுத்துதற்கு
அனல் பறவை முத்தமிட்டு
பகைவனை நீ நடுங்கவைத்தாய்
நெஞ்சதனை கல்லாக்கி
நம் இனத்து களைகளையும்
கட்சிதமாய் களைந்தெடுத்தாய்!
அன்னிய நாடொன்று
நய வஞ்சகமாக
நம் இனம் அழிவதற்கு
துணைபோன போதினிலே
அவனையும் வென்றெடுத்த
இனையற்ற மன்னவன் நீ!
அதற்காக நீ அடைந்த
அவப்பெயரும் நாமறிவோம்!
அண்ணண் அக்கா மட்டுமில்லை
அன்னை பிதா என்ற போதும்
இழப்பதற்கு நாங்கள் தயார்
என்ற உன் உரையதனின்
உண்மையும் நாம் அறிவோம்!
அவப்பேறு உன் மீது
பழி கூறும் எவரேனும்
தமிழன்னை ஈன்றெடுத்த
மகனாக இருக்காது
அவர் எண்ணம் குற்றம்!
எண்ணும் உறுப்புக் குற்றம்!
உறுப்பின் படைப்புக்குற்றம்!
படைப்பின் பிறப்பில் குற்றம்!
நீ வருவாய் என்பதனில்
எள்ளளவும் கள்ளமில்லை!
நீ வரும் வரை இனத்தை
யார் வழி நடத்துவது?
என்பதனில் சில பேர்க்கு
பல மாறு கருத்துண்டு!
கண்முன் நீ இருந்து
நம்பகமாய் கைகாட்டி
இவர் இவர் இதற்கென்று
நியமித்த அவ்வவரை
நீ சொன்ன வாக்காக
நம் இனத்தோர்
எண்ண வேண்டும்!
கருத்ததனில் வேறுபாடு
இல்லாத இனம் இல்லை!
இல்லாத இனம் என்றும்
முன்னேறி வாழ்ந்ததில்லை!
எது இருந்த போதினிலும்
இக்கட்டு நிலை இதனில்
குள்ள நரிக்கூட்டங்கள்
ஊடுருவக் காத்திருக்கும்!
ஊடுருவல் எம் இனத்தின்
பல்லாண்டு தாகமதை
எள்ளளவும் எண்ணாமல்
அடியோடு அறுத்தெறியும்!
சிந்தித்து செயல் படுங்கள்
சேதமதை தவிர்த்திடுங்கள்!
காட்டுக்குள் தவமிருந்து
நாட்டுக்குள் களமாடி
தளம் பல பல கொண்ட
தமிழ் தாகம் கொண்டவன் நீ!
மண்டியிட்டு வாழ்வதற்கு
நெஞ்சுயர்த்தி மடிவது மேல்
எண்றுரைத்த உன்னதன் நீ!
கண்களிலே காந்த சக்தி!
கழுத்தினிலே கசப்பு வில்லை!
கருத்ததனில் வீர வேங்கை!
களத்தினிலே கரும்புலி!
நீ பிறந்த மண்னதனில்
காதல் கீதம்கூட
காதலிக்கும் தேசமதை!
கடுமழை பொழிந்தபோதும்
கார்மேகம் சூழ்ந்த போதும்
கானகம் கறுத்த போதும்
கடல் எம்மை வதைத்த போதும்
கடவுளும் கை
விட்டபோதும்
காவலனாய் நீ இருந்தாய்!
கனல் பந்தம் கையில் ஏந்தி
நீ கார் இருளை கடைந்த போது
கர்வமாய் உன் உருவம்
கவ்வியது எம் மனதை!
உன்போன்ற பெருந்தலைவன்
கரியாகி விட்டானாம்
காடையர்கள் கூறுகிறார்!
கணம் கூட கருத வேண்டாம்
கறுப்பு தினம் அனுசரிக்க!
கவனமாய் உள்ளான் அவன்
கருத்ததனில் மாறு வேண்டாம்!
கலங்கிடாதே மறத்தமிழா
இனத்திற்கு வேண்டுகையில்
காடயரை களமாட
கட்டாயம் கண் திறப்பான்!
எப்போது கட்டாயம்
என்பதுவும் அவன் அறிவான்!
கதிரவனாய் அவன் வருவான்
நம் கண்ணீரை துடைத்திடுவான்!
கதிரவனாய் அவன் வருவான்
நம் கண்ணீரை துடைத்திடுவான்!
ஈழன் இளங்கோ
அவுஸ்திரேலியா