Monday, January 17, 2011

காவியப் பெண்ணே இசைப்பிரியா






ஈழத்தமிழர் இதயங்களில் இமயமானவள் நீ

வாழ்ந்த போதும் இனத்திற்கு வளங்கள் செய்தவள் நீ

வாழ்வு முடியும் போதும் முடிந்த போதும் காவியமானவள் நீ

இறந்த பின்னும் இனத்திற்கு இனிதே செய்தவள் நீ

உன் உருவம் கண்ட உலகிற்கெமது உரிமை சொன்னவள் நீ

நெஞ்சை உருக வைத்தவள் நீ

கலக்கமில்லா எண்ணம் கொண்ட ஓவிய பெண் அவள் நீ

இழக்க முடியா இழப்பை எல்லாம் எமக்காய் இழந்தவள் நீ

உடைந்து உருகி உணர்வைப் பிழிந்து நன்றி கூறுகின்றோம்

நன்றி என்ற வார்த்தை மட்டும் நன்று இல்லையடி

உலகில் இறைவன் என்றொருவன் எமக்கு வேண்டுமென்றால்

உன் உருவம் அன்றி வேறெதையும் எம் இனம் கொண்டிடுமோ?

முடிந்து விழுந்து மடிந்த பின்னும் உன் காலடி நாம் தொழுவோம்!

இந்த உலகம் இருக்கும் இறுதிக்கணமும் உன் பெயர் நாம் மறவோம்

தமிழ் அன்னை உன் வடிவே என்று கொண்டுனை அம்மா என்றிடுவோம்

தமிழ் அன்னை நீ என்றிடுவோம்!

ஈழன் இளங்கோ

அவுஸ்திரேலியா

05/12/2010